/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூவரைவென்றான் குடைவரை கோயில் புனரமைப்பு பணி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மூவரைவென்றான் குடைவரை கோயில் புனரமைப்பு பணி உயர்நீதிமன்றம் உத்தரவு
மூவரைவென்றான் குடைவரை கோயில் புனரமைப்பு பணி உயர்நீதிமன்றம் உத்தரவு
மூவரைவென்றான் குடைவரை கோயில் புனரமைப்பு பணி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 27, 2025 07:21 AM
மதுரை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மூவரைவென்றான் குடைவரை கோயில் புனரமைப்பு பணியில் தொல்லியல்துறையின் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராஜபாளையம் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாண்டிய மன்னர்கள் ஆட்சியின்போது 8ம் நுாற்றாண்டில்மூவரைவென்றானில் குடைவரை கோயில் கட்டப்பட்டது. மலைகொழுந்தீஸ்வரர் பெயர் கொண்ட லிங்கம் பாறையால் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மகாமண்டபம் தவிர்த்து பிற பகுதிகளில் தொல்லியல் துறை மூலம் புனரமைப்பு பணி நடக்கிறது. அர்த்தமண்டபம், கருவறையில் தளம் அமைக்க வேறு இடங்களில் பயன்படுத்திய கற்களை கொண்டு வந்து பதிக்க ஏற்பாடு செய்கின்றனர். இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படும். அசல் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சதீஷ், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுப்பாராஜ், மகாராஜன், கோயில் தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகம் ஆஜராகினர்.
மதுரை தொல்லியல்துறை அதிகாரி தாக்கல் செய்த பதில் மனு: கோயில் கருவறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கருவறை அதன் அசல் கட்டடக்கலை, புனித தன்மையுடன் பாதுகாக்கப்படுகிறது. கருவறையின் அசல் தரைத்தளம் வேறு எந்த கற்களாலும் மாற்றியமைக்கப்படவில்லை.நினைவுச்சின்னம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளின்படி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டு தற்போதைய நிலை மற்றும் புனரமைப்பு பணிக்குரிய போட்டோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தொல்லியல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. இருப்பினும், புனரமைப்பு பணி மேற்கொள்ளும்போது தொல்லியல்துறையின் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவிட்டனர்.