sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் சொத்துக்களை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கோயில் சொத்துக்களை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துக்களை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துக்களை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : அக் 11, 2025 05:43 AM

Google News

ADDED : அக் 11, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கோயில்கள் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

கோயில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பட்டா நிலம், மானிய நிலம், ஊழியம் நிலம் என்ற வகைப்பாடுகளில் கோயில் நிலம் உள்ளது. புது அரசாணை மூலம் கோயில் சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை, அறநிலையத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us