sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கைவிடப்பட்ட குவாரிகள் விபரம் கேட்கிறது ஐகோர்ட்

/

 கைவிடப்பட்ட குவாரிகள் விபரம் கேட்கிறது ஐகோர்ட்

 கைவிடப்பட்ட குவாரிகள் விபரம் கேட்கிறது ஐகோர்ட்

 கைவிடப்பட்ட குவாரிகள் விபரம் கேட்கிறது ஐகோர்ட்


ADDED : ஜன 13, 2026 04:42 AM

Google News

ADDED : ஜன 13, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகள், அவற்றை நடத்த உரிமம் பெற்றும், பாதுகாப்பு வசதிகள் செய்ய தவறியவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, முத்துராமன் தாக்கல் செய்த பொதுநல மனு:

குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கும் போது, 10 சதவீதம் பசுமை நிதி வசூலிக்கப்படுகிறது. இவற்றை, கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைக்க, சுற்றிலும் வேலி அமைக்க பயன்படுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளில் மழைநீர் தேங்குகிறது. இவற்றில், மனிதர்கள், கால்நடைகள் மூழ்கி இறக்கும் அபாயம் உள்ளது. இக்குவாரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு செயல்படுவதில்லை.

மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். பசுமை நிதி மூலம் சீரமைப்பு பணி மேற்கொள்ள வலியுறுத்தி, கலெக்டர், கனிமவள உதவி இயக்குநருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, 'மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகள் எத்தனை; அவற்றை நடத்த உரிமம் பெற்றும், பாதுகாப்பு வசதிகள் செய்ய தவறியவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ஜன., 23ல் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us