sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வரதட்சணை வழக்கில் ஏட்டுக்கு 'கம்பி' அவரது தந்தையான இன்ஸ்., தலைமறைவு

/

வரதட்சணை வழக்கில் ஏட்டுக்கு 'கம்பி' அவரது தந்தையான இன்ஸ்., தலைமறைவு

வரதட்சணை வழக்கில் ஏட்டுக்கு 'கம்பி' அவரது தந்தையான இன்ஸ்., தலைமறைவு

வரதட்சணை வழக்கில் ஏட்டுக்கு 'கம்பி' அவரது தந்தையான இன்ஸ்., தலைமறைவு


ADDED : ஜூலை 20, 2025 03:14 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் வரதட்சணை வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் ஏட்டு, திருப்பூரில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டரான அவரது தந்தை மறைவாக உள்ளார்.

மதுரை, காதக்கிணற்றில் வசிப்பவர் பூபாலன், 35; அப்பன்திருப்பதி போலீஸ் ஏட்டு. இவரது மனைவி தங்கப்பிரியா,30. இரு மகன்கள் உள்ளனர்.

திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், தங்கப்பிரியாவின் மாமனாரான விருதுநகர் மாவட்டம், சாப்டூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோரின் துாண்டுதலில், கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார்.

காயம்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மனைவியை தாக்கியது குறித்து தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோ பரவியதால், அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். அவரும், செந்தில்குமாரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை திருப்பூரில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த பூபாலனை, தனிப்படை போலீசார் மதுரை அழைத்து வந்தனர்.

அவர் பணியாற்றும் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சக போலீசாரால் பூபாலன் கைது செய்யப்பட்டார்.

செந்தில்குமார் தலைமறைவாக உள்ளார்.






      Dinamalar
      Follow us