/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரலாற்று பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும்
/
வரலாற்று பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும்
ADDED : பிப் 11, 2026 06:41 AM
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் வரலாற்று துறை சார்பில் 'தொல்பொருள் சான்றுகளிலிருந்து பாண்டிய நாட்டின் கலாசாரம், பாரம்பரியம்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. துறைத் தலைவர் சாராள் இவாஞ்சலின் வரவேற்றார். செயலாளர் இக்னேஷியஸ்மேரி முன்னிலை வகித்தார். முதல்வர் பாத்திமா மேரி துவக்கி வைத்தார்.
அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், இலக்கியங்களில் மேற்கோள் காட்டப்பட்டு வந்த பாண்டியர்கள் ஆட்சி முறையும், சங்ககால சமூகமும் கீழடி, பொருநை அகழாய்வுகளின் மூலம் உலகிற்கு பறைசாற்றப்பட்டது. இதுபோன்ற வரலாற்றை வாசிக்க தவறியவர்கள் தான் வரலாற்றில் மீண்டும் பிழை செய்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் என்றார்.
அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் ஜெக நாதன், பேராசிரியை ேஹமா பங்கேற்றனர். 110 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மாணவி பிரவீனா தொகுத்து வழங்கினார். பேராசிரியை விஜயசாந்தி நன்றி கூறினார்.

