ADDED : மார் 04, 2026 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 14 வயது, 15 வயது சிறுமிகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் எச்.பி.வி., தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது.
டீன் அருள் சுந்தரேஷ்குமார் துவக்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், குழந்தைகள் நலப்பிரிவு இயக்குநர் டாக்டர் நந்தினி, தடுப்பூசி திட்ட மேலாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டனர்.
டீன் கூறுகையில், ''அனைத்து தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

