ADDED : டிச 11, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவுப்படி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வட்ட சட்டப்பணி குழு சார்பில் மனித உரிமை நாள் சட்ட விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி சுகாதாரம், துாய்மை பணியாளர்களுக்கு நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார், வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர்கள் முத்துமணி, செல்வகுமார், ராமசாமி, விஜயகுமார், அழகர்சாமி ஆகியோர் மனித உரிமைகள், பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினர். அஞ்சல் துறை ஆய்வாளர் மணிவேல் அஞ்சல் துறை திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

