/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்மாதிரி தொகுதியாக குன்றத்தை மாற்றுவேன்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா
முன்மாதிரி தொகுதியாக குன்றத்தை மாற்றுவேன்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா
முன்மாதிரி தொகுதியாக குன்றத்தை மாற்றுவேன்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா
ADDED : ஏப் 04, 2026 06:38 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., கிருத்திகா தங்கப்பாண்டியன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசின் எண்ணற்ற திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்றடைந்துள்ளது. அது ஒவ்வொரு மகளிரின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
30 ஆண்டுகள் திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சி பெறவே இல்லை. அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றவில்லை. திருப்பரங்குன்றத்தை தமிழகத்தின் முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன். திருப்பரங்குன்றம் தீப பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார். காங்., மகேந்திரன், தே.மு.தி.க., கணபதி, திருமங்கலம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி உடன் இருந்தனர்.
