sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

/

 கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

 கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

 கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்


ADDED : டிச 27, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் கடலைப் பருப்பின் விலை குறைந்து உள்ளதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 30 சதவீத வரி விதிக்க வேண்டும்' என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிர காசம் கூறியதாவது:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொண்டைக்கடலை அதிகளவில் உற்பத்தியாகிறது. கொண்டைக் கடலையை உடைத்தால் கடலைப் பருப்பு, வறுத்தால் பொரி கடலை, அரைத்தால் கடலைமாவு என பல்வேறு வடிவங்களில் நுகர்வோர் பயன்படுத்துகின்றனர்.

100 கிலோ கடலை பருப்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலை ரூ. 5800. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் ரூ.5400க்கு குறைவான அளவே மார்க்கெட்டில் விலைபோகிறது. கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து கடலைப் பருப்பு தொடர்ந்து இறக்குமதி யாகிறது.

அடுத்து மார்ச்சில் உள்நாட்டு அறுவடை தொடங்கி விட்டால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காது. அதேநேரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கடலைபருப்புக்கு 30 சதவீத வரி விதித்தால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். விலைவாசி குறைவ தற்கோ, அதிகரிப்பதற்கோ வாய்ப்பில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us