ADDED : பிப் 18, 2024 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.90 கோடி மதிப்பிலான புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
இங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் வேட்டையன் குத்து விளக்கு ஏற்றினார்.
துணை சேர்மன் இந்திரா, கமிஷனர் செந்தில்மணி, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், ராஜேந்திரன், சுப்புலட்சுமி, பஞ்சராஜ், உஷாராணி, லட்சுமி, களஞ்சியம், சுமதி, சபீனா, ஆசைத்தம்பி, மணிமாறன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.