ADDED : மார் 04, 2024 05:53 AM

அ நிறம் | அளவு
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டையில் உள்ள அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மதியம் 12:00 மணிக்கு உச்சிப் படிப்பு நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு உகப்படிப்பு, அய்யாவுக்கு சிறப்பு தாலாட்டும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தலைப்பாகை கட்டி வழிபட்டனர்.
