UPDATED : ஆக 16, 2026 06:50 PM
ADDED : ஆக 16, 2026 06:42 PM
மதுரை மாநகராட்சி 9வது வார்டு இலந்தைக் குளம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வெங்கடேசன் தேசிய கொடியேற்றினார். சங்கத் தலைவர் இளங்கோவன், செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் சையது அபுதாஹிர், கார்த்திக்குமார், கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை சுப்ரமணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் மாநில மையம் சார்பில் நடந்த விழாவுக்கு மாநில தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, துணைச் செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வராஜ் கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், துணைச் செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், கான்சாஒலி உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரியில் முழுவிலக்கு அளிப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அனைத்து நிலையிலும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்
அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாகுடி ஏ.ஆர்.சிட்டி பூங்கா வளாகத்தில் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. துணைத்தலைவர் குருசாமி, துணைச் செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தனர். சங்க ஆலோசகர்கள் ஆதவன், செந்தில், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோதனை, ஹரிசங்கர் தேசிய கொடி ஏற்றினர். பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
