/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்திய, ஐக்கிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தம்; ஏற்றுமதி கட்டமைப்பு கருத்தரங்கு
/
இந்திய, ஐக்கிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தம்; ஏற்றுமதி கட்டமைப்பு கருத்தரங்கு
இந்திய, ஐக்கிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தம்; ஏற்றுமதி கட்டமைப்பு கருத்தரங்கு
இந்திய, ஐக்கிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தம்; ஏற்றுமதி கட்டமைப்பு கருத்தரங்கு
ADDED : டிச 19, 2025 07:30 AM

மதுரை: இந்திய, ஐக்கிய நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் சார்பில் ஏற்றுமதி கட்டமைப்பு கருத்தரங்கு நடந்தது.
இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பு இணை இயக்குநர் செல்வநாயகி வரவேற்றார். ஏற்றுமதி ஊக்குவிப்பு மைய சேர்மன் ராஜமூர்த்தி பேசியதாவது:
அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐக்கிய நாடுகளுடனான (யு.கே.) வர்த்தக ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இருந்து டெக்ஸ்டைல், லெதர், விவசாயம், உணவுசார்ந்த 99 சதவீத பொருட்களை வரியில்லாமல் ஏற்றுமதி செய்யலாம். இந்தியப் பொருட்களை வாங்குவோருக்கான சந்தை அதிகரித்துள்ளது.
இந்த வாய்ப்பை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பு இந்த கருத்தரங்கை நடத்தியது என்றார்.
வெளிநாட்டு வர்த்தக நிறுவன இயக்குனரக (டி.ஜி.எப்.டி.,) இணை இயக்குநர் ஆனந்த் மோகன் மிஸ்ரா துவக்கி வைத்தார். ஏற்றுமதியின் போது வாங்குவோரை தேர்வு செய்வது குறித்து ஆலோசகர் சிவ ராமன் விளக்கினார்.

