ADDED : ஜன 06, 2026 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, :மதுரையில் இந்திய கம்யூ., சார்பில், வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சாமி, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட தலைவர் நந்தாசிங் தலைமை வகித்தனர். இ.கம்யூ., கிழக்குசெயலாளர் சந்திரசேகர்,ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாதர்சங்க மாநில தலைவர் ராஜலட்சுமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாலையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

