sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இந்திய பொருளாதாரம் 3ம் இடத்திற்கு முன்னேறும்: தேசிய புள்ளியியல் திட்ட அமைச்சகம் தகவல்

/

இந்திய பொருளாதாரம் 3ம் இடத்திற்கு முன்னேறும்: தேசிய புள்ளியியல் திட்ட அமைச்சகம் தகவல்

இந்திய பொருளாதாரம் 3ம் இடத்திற்கு முன்னேறும்: தேசிய புள்ளியியல் திட்ட அமைச்சகம் தகவல்

இந்திய பொருளாதாரம் 3ம் இடத்திற்கு முன்னேறும்: தேசிய புள்ளியியல் திட்ட அமைச்சகம் தகவல்


ADDED : ஏப் 30, 2025 05:40 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; 'அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலகளவில் 3ம் இடத்திற்கு முன்னேறும்' என தேசிய புள்ளியியல் திட்ட அமைச்சகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் தகவல்.

மதுரை பூதகுடியில் தேசிய புள்ளியியல் தரவுகள், திட்ட அமைச்சகம் சார்பில் 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்வில் முதுநிலை புள்ளியியல் அலுவலர் முருகன் வரவேற்றார். மண்டல இயக்குனர் விஷ்ணுராஜ் தலைமை வகித்து பேசியதாவது: தரவுகள் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்த முடிந்தது.

தரவுகள் ரகசியமாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்கள் அளித்தால் மட்டுமே தேவைப்படும் திட்டங்கள் கண்டறிய முடியும். இந்த விழிப்புணர்வை மற்றவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

உதவி மண்டல இயக்குனர் பழனியப்பன் பேசியதாவது: தேசிய அளவில் நடத்தப்படும் ஆய்வுகள் நம் வீட்டிலோ, ஊரிலோ மட்டும் எடுக்கப்படுவதில்லை இதை பற்றிய புரிதல் அவசியம்.

கிராமத்திலோ, நகரத்திலோ மக்கள் தொகைக்கேற்ப 20 சதவீத மக்களிடம் மாதிரி ஆய்வுகள் கணக்கெடுக்கிறோம். பொருளின் விலை நகரத்தை விட கிராமத்தில் கூடுதலாக விற்கப்படுகிறது. இவை தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து மத்திய அரசுக்கு தெரியபடுத்தி அதற்குரிய காரணம் கண்டறியப்படும்.

சுகாதாரம் குறித்து தெரிந்திருப்பது முக்கியம். மத்திய அரசின் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள திட்டங்கள் பற்றி தெரியபடுத்துகிறோம்.

எனவே அமைச்சகம் சார்பில் தரவுகள் சேகரிக்க வருபவரிடம் தெளிவான, உண்மையான தகவல்கள் கூறினால் நல்லத்திட்டங்கள் கிடைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் என்றார்.

கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் நிவேதா நன்றி கூறினார். வி.ஏ.ஓ., பாலமுருகன், குலமங்கலம் சுகாதார மைய டாக்டர் ராஜ்கபூர், பஞ்., மேற்கு துணை வட்டார அலுவலர் மீனாட்சி சுந்தரம், அலங்காநல்லுார் ஏட்டு சுரேஷ் குமார், மாவட்ட பஞ்., வள மையம் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us