/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உலக கோப்பை வென்ற இந்திய அணி: கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்
/
உலக கோப்பை வென்ற இந்திய அணி: கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்
உலக கோப்பை வென்ற இந்திய அணி: கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்
உலக கோப்பை வென்ற இந்திய அணி: கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்
ADDED : ஜூலை 01, 2024 03:37 PM

மதுரை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வெற்றியை இந்தியா முழுதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். மதுரை கோவில்பாப்பாகுடி, ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நட்புறவு கிரிக்கெட் போட்டியும் நடத்தினர். பின்பு, கிரிக்கெட் மைதானம், பேட், ஸ்டம்ப், பந்து மற்றும் நீல நிற ஜெர்சி உடன் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட கேக்கை வெட்டி தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.