ADDED : செப் 04, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அண்ணா பல்கலை உறுப்புக் கல்லுாரியில் பொறியியல், எம்.பி.ஏ., முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
டீன் லிங்கதுரை தலைமை வகித்தார். பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். முதன்மை விருந்தினர் வருமான வரித்துறை இணைக்கமிஷனர் அழகப்பன் வரி செலுத்துவதன் அவசியத்தை விளக்கினார். சிறப்பு விருந்தினரான சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., சந்திரகுமார், டிஜிட்டல் உலகில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்களை பற்றி பேசினார். பேராசிரியர் தங்கராஜா நன்றி கூறினார்.
