ADDED : ஆக 08, 2025 02:49 AM
அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நிட்சுதட்சு பியூஜீ குருஜீயின் 140வது பிறந்தநாள், 80வது ஹிரோஷிமா நாகசாகி நினைவு நாள்,
அமைதி பிரார்த்தனை மற்றும் சர்வ சமய பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இயக்குனர் நடன குருநாதன் பேசினார். ஆசிரியர் கமலஜோதி வரவேற்றார். புத்தபிக்குகள், புத்த பிக்குனிகள் அமைதி பிரார்த்தனை மற்றும் சர்வ சமய பிரார்த்தனை மேற்கொண்டனர். ஆசிரியர் மெஹராஜ்பேகம் நன்றி கூறினார்.
