sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி

/

ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி

ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி

ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு கருவி


ADDED : அக் 19, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் வினியோகிக்கப்படுகிறது.

பல கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடு நடப்பதால், விற்பனையாளர்களால் 'பி.ஓ.எஸ்.,' கருவியில் பதிவு செய்து வழங்கப்படுகிறது. இதில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை பதிவு செய்து வழங்குகின்றனர். இதிலும் சில பிரச்னைகள் உள்ளதாக அடிக்கடி புகார் கிளம்பியது.

பலருடைய ரேகைகள் முறையாக பதிவாகாததால் பொருட்கள் வாங்கச் செல்கையில் ஒரு நபரே நீண்ட நேரம் விரலை மாற்றி, மாற்றி வைத்தும் பதிவாகாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து அடிக்கடி புகார்கள் சென்றதால் அரசு குடும்ப அட்டைதாரர்களின் கருவிழிகளை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட வினியோக அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், ''மாவட்டத்தில் 1152 கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. பகுதி நேர கடைகள் 237 ல் இதுவரை 18 கடைகளுக்கு கருவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற கடைகளுக்கும் வழங்கப்படும். இக்கடைகளில் பதிவில் பிரச்னை வந்தால் அருகில் உள்ள கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.






      Dinamalar
      Follow us