sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பழுதாவதும் பயன்பாட்டுக்கு வருவதும் வாடிக்கையா போச்சு

/

பழுதாவதும் பயன்பாட்டுக்கு வருவதும் வாடிக்கையா போச்சு

பழுதாவதும் பயன்பாட்டுக்கு வருவதும் வாடிக்கையா போச்சு

பழுதாவதும் பயன்பாட்டுக்கு வருவதும் வாடிக்கையா போச்சு


ADDED : நவ 09, 2025 06:08 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுார் மாநில நெடுஞ்சாலை நாவினி பட்டியில் 48 தெருவிளக்குகள் பழுதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

மேலுார் - -- திருப்பத்துார் ரோட்டில் நாவினிபட்டி ஊராட்சி துவங்குகிறது. இம்மாநில நெடுஞ்சாலையில் 2023 தமிழக அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் இருந்து ரூ.119 கோடியில் புதிய பாலம், ரோட்டின் தரத்தை உயர்த்தி 7 ஆண்டுகள் பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் நாவினி பட்டியில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகள் ஒன்றரை மாதமாக பழுதாகி உள்ளது. வெளிச்சம் இல்லாததால் மக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். மின்கட்டணம் செலுத்தாததால் அடிக்கடி மின் சப்ளை துண்டிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்பகுதி சம்சுதீன் கூறியதாவது : தெருவிளக்குகள் பழுதால் கும்மிருட்டாக உள்ளது. அதனால் அத்தியாவசிய பணிக்காக வெளியூர் சென்றவர்கள் அச்சத்துடனே வீடு திரும்புகின்றனர். பெண்கள் செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இரவில் வாகனங்களை அடையாளம் காணும்முன்பு நடந்து செல்வோர், கால்நடைகள் விபத்தில் சிக்குகின்றன. ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்த நிறுவனம் சரிவர பராமரிக்கவில்லை. விபரீத விளைவுகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''கட்டணம் செலுத்தாததால் மின்சப்ளை துண்டிக்கப்படுவதாக கூறுவது தவறு. தானியங்கி டைமர் இயந்திர பழுதால் தெருவிளக்குகள் சரியாக வேலை செய்யவில்லை. உடனடியாக பழுது நீக்கப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us