ADDED : நவ 06, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு தேசியமயமான வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்தவர் கிரண் பாபு. இவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மனைவி நிஷிபா பெயரிலான வங்கி கணக்கிற்கு ரூ.4 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரத்து 606 ஐ பரிமாற்றம் செய்தார்.
கிரண்பாபு மீது சி.பி.ஐ.,போலீசார் 2018 ல் மோசடி வழக்கு பதிந்தனர். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.