sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லிக்கட்டு நடத்தியது அரசா, தி.மு.க.,வா

/

ஜல்லிக்கட்டு நடத்தியது அரசா, தி.மு.க.,வா

ஜல்லிக்கட்டு நடத்தியது அரசா, தி.மு.க.,வா

ஜல்லிக்கட்டு நடத்தியது அரசா, தி.மு.க.,வா


ADDED : ஜன 18, 2024 06:31 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம், : ''மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது தமிழக அரசா அல்லது தி.மு.க., வா'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெல்லும் வீரர்கள், காளைகளுக்கு பரிசு வழங்க பலர் தயாராக இருந்தனர்.

அதனை முறையாக வாங்காததால், 2, 3 ம் இடம் பிடித்த காளைகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்க இயலாமல் போய்விட்டது. பார்வையாளர்களுக்கு இடம் ஒதுக்காததால் ஜல்லிக்கட்டை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து நடத்தியது. அங்கு நடந்ததை பார்த்தபோது போட்டியை நடத்தியது தமிழக அரசா அல்லது தி.மு.க.,வா என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பெறும் வீரர், காளைக்கு பரிசளிக்க தவறினால், அ.தி.மு.க., சார்பில் பரிசளிப்போம்.

2026ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வரானவுடன் எய்ம்ஸ் திறப்பு விழா நடைபெறும்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு வழங்க வேண்டிய இடத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி இருப்பதால் நீதிமன்ற ஆணை பெற்றோ, அல்லது மாற்று ஏற்பாடுகளையோ தமிழக அரசு செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us