நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கூத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கமலம் 31, விவசாய கூலித் தொழிலாளி. வீட்டின் கீழ் தளத்தில் மகன் குடியிருக்கவே, மாடியில் தென்னங்கீற்றால் வீடு அமைத்து வசித்தார்.
வேலைக்கு சென்றவருக்கு வீடு தீப்பிடித்து எரிவதாக தகவல் வரவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த 2 பவுன் நகை, பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் தீக்கிரையானது தெரிந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து மேலுார் எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.

