ADDED : அக் 11, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்: தும்பை பட்டி பஞ்சவர்ணம் 60, நேற்று காலை மாடு மேய்க்க சென்றவர் மதியம் வீடு திரும்பினார்.
வீட்டிற்குள் இருந்த நபர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி அங்கு நின்றிருந்த காரில் ஏறி தப்பினார். பஞ்சவர்ணம் வீட்டுக்குள் பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.