ADDED : செப் 05, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
சேர்மன் டாக்டர் மாதவன் தலைமை வகித்தார். முதல்வர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., லிட்., நிறுவனத்தினர் மாணவர்களுக்கு எழுத்து, நேர்முக தேர்வு நடத்தினர். உதவி மேலாளர் சந்தானம், எச்.ஆர். டானல் ஆகியோர் 51 மாணவர்களை தேர்வு செய்தனர். இம் மாணவர்களை செயல் இயக்குனர் தினேஷ், இணை செயலாளர் ஜெகன், செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், காந்திநாதன், மீனாட்சிசுந்தரம், கல்வி ஒருங்கிணைப்பாளர் பால் நிக்சன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் சேதுராஜ் செய்திருந்தார்.
