நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார், நிலஅளவு கணிகவரைவாளர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தனர். நிலஅளவை அலவலர்கள் ஒன்றிப்பு மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, நிலஅளவு கணிக வரைவாளர் சங்க மாநில இளைஞரணி இணைச் செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
தீர்மானங்கள் குறித்து கணிக வரைவாளர் சங்க மாவட்ட செயலாளர் சசிகுமார், நிலஅளவை அலுவலர் சங்க செயலாளர் ரகுபதி விளக்கினர். மாவட்ட இணைச் செயலாளர் திவ்யா நன்றி கூறினார்.

