ADDED : ஜன 29, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை செந்தாமரை கல்லுாரியில் மதுரை மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. முதல்வர் செந்துார்பாண்டி தொடங்கி வைத்தார். இறுதிப் போட்டியில் திருநகர் எம்.எம்.பள்ளியின் இரு அணிகள் மோதின.
இதில் 21 - 18 புள்ளிகளில் முதலிடம், 2ம் இடம் பெற்றன. ஜெயராஜ் நாடார் பள்ளி 3ம் இடம், இளங்கோ மாநகராட்சி பள்ளி 4ம் இடம் பெற்றன. மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வித்துறைத் தலைவர் ரமேஷ் பரிசு, கோப்பை வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் கவிக்குமார், ஜெயதங்கம் செய்தனர்.
