நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை செல்லுார் கண்மாய் கரையில் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் இயற்கை கலுங்கு பொங்கல் கொண்டாடப்பட்டது.
பேராசிரியர் நாகரத்தினம் தலைமை வகித்தார். கண்ணன் வரவேற்றார். தனராஜ், அரசுமணி, சரோஜனி முன்னிலை வகித்தனர். நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் அபுபக்கர் பேசுகையில், ''சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டுமானால் செல்லுார் கண்மாயை பாதுகாக்க வேண்டும்'' என்றார். மக்கள் சட்ட உரிமை இயக்க தலைவர் அண்ணாத்துரை, வழக்கறிஞர் ஜமாலுதீன், வீரமணி, ஜாகீர் பங்கேற்றனர்.