ADDED : ஜன 27, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில், கவிஞர் ரவி தலைமையில் சிந்தனை கவியரங்கம் நடந்தது.
ஆலோசகர் வீர அதிசிவத் தென்னவன் வரவேற்றார். பொருளாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் பால் பேரின்பநாதன், குறளடியான், அழகையா, இளையாங்குடி இதயத்துல்லா, பழனி, முனியாண்டி, அரங்க கிரிதரன் ஆகியோர் கவிதை பாடினர். சிறந்த கவிதை பாடியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
துணைச் செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார்.புரட்சிப் பாவலர் மன்ற தலைவர் வரதராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
