/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் கேள்வி
/
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : ஏப் 17, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 10ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கலெக்டர், எஸ்.பி., விக்கிரமங்கலம் போலீசாரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு: இத்தகைய போட்டி நடத்த அரசு தரப்பில் வெளியிட்டுள்ள கிராமங்களின் பட்டியலில் கல்புளிச்சான்பட்டி இடம் பெற்றுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விசாரணை ஏப்.22 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.