ADDED : டிச 04, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : செக்கானுாரணியை அடுத்த தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் காசிமாயன். இவர் சோழவந்தான் பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார்.
நேற்று முன்தினம் மாலை இவரது ஆட்டோவில் பயணம் செய்த பயணி பர்ஸை தவறவிட்டுச் சென்றார். அதில் ரூ.1000 மற்றும் ஆவணங்கள் இருந்தன. அதனை காசிமாயன் சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து எஸ்.ஐ.,ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்தனர். பர்ஸ் உரிமையாளர் பொட்டுலுபட்டி லிங்கம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.