ADDED : மார் 21, 2024 02:21 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான், மார்ச் 21 --
சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தில் அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் வீட்டில் உள்ள சுவாமி ஆபரண பெட்டிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இக்கோயில் அழகுமலையான் பங்காளிகள் பெட்டி எடுப்பு விழா நடந்து 55 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது கோயில் வீடு கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
