sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குன்றத்து குமரனுக்கு இன்று பட்டாபிஷேகம்

/

 குன்றத்து குமரனுக்கு இன்று பட்டாபிஷேகம்

 குன்றத்து குமரனுக்கு இன்று பட்டாபிஷேகம்

 குன்றத்து குமரனுக்கு இன்று பட்டாபிஷேகம்


ADDED : டிச 02, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு கார்த்திகை திருவிழா பட்டாபிஷேகம் இன்று (டிச. 2) நடக்கிறது.

கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ. 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மலை மேல் மஹா தீபம் ஏற்றும் நிகழ்வு நாளை (டிச.,3) மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்றிரவு 7:05 முதல் இரவு 7:30 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை காமதேனு வாகனம் கோயில் திருவிழா காலங்களில் சுவாமி, தெய்வானை தினம் ஒரு வாகனத்தில் ரத வீதிகளில் உலா வருவர். கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். நாளை பக்தர்கள் கோயில் முன் வாசல் வழியாக சென்று தரிசனம் முடித்து மடப்பள்ளி வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். மதியம் நடை சாத்தப்படாது.

ஆண்டுக்கு 2 முறை 16 கால் மண்டபம் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் தெப்பத் திருவிழா, கார்த்திகை திருவிழாவில் ரத வீதிகளில் வலம் வரும். நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.






      Dinamalar
      Follow us