sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிக்கணும் மதுரையில் ரோஜா பேட்டி

/

லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிக்கணும் மதுரையில் ரோஜா பேட்டி

லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிக்கணும் மதுரையில் ரோஜா பேட்டி

லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிக்கணும் மதுரையில் ரோஜா பேட்டி


ADDED : செப் 28, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார். இதுகுறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்,'' என, மதுரையில் ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா கூறினார்.

நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் அவர் கூறியதாவது:

உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கிறது. சந்திரபாபு நாயுடு சுய நலத்துக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவர் ஒரு திட்டமும் செய்யவில்லை. தன் தவறை மறைக்க திருப்பதி லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். மார்ச் உடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி முடிந்தது. ஜூலையில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. வனஸ்பதி கலந்ததால் அவை நிராகரிக்கப்பட்டது.

லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்யமாக்கவே சந்திரபாபு நாயுடு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பக்தியும் இல்லை. கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடவுளை தன் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார். எந்தவொரு விசாரணையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். சனாதனத்தின்படி பேசும் துணைமுதல்வர் பவன் கல்யாண், அவரது வீட்டில் சனாதனத்தை கடைப்பிடிப்பதில்லை. சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை பேசி வருகிறார் என்றார்.






      Dinamalar
      Follow us