ADDED : நவ 17, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் தென்னமநல்லுார் ஆனந்தன். ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர். விவசாயம் செய்தார்.
இவருக்கும் சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. அதே பகுதியில் 2014 ல் டூவீலரில் சென்றபோது கொலை செய்யப்பட்டார். கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம் சாத்துார் வழக்கறிஞர் செந்தில் 45, மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு 2019ல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அவரை ஸ்ரீவில்லிபுத்துாரில் போலீசார் கைது செய்தனர். மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிவகடாட்சம் காவலில் வைக்க உத்தரவிட்டார்.