ADDED : ஜூன் 06, 2026 04:51 AM

அ நிறம் | அளவு
மதுரை: தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான 'ஜாக்' சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்கிய ஊர்வலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தை அடைந்தது. தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வன், பொருளாளர் ரவி தலைமை வகித்தனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜெ.எம்.,5 நீதிபதி லட்சுமிபிரியா சில வழக்கறிஞர்களை மரியாதை குறைவாக நடத்தினார். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இது சட்டத்திற்கு புறம்பானது. அவரை நீதிபதி பதவிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
