sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நெல்லில் இலை கருகல் நோய்

/

 நெல்லில் இலை கருகல் நோய்

 நெல்லில் இலை கருகல் நோய்

 நெல்லில் இலை கருகல் நோய்


ADDED : டிச 16, 2025 08:04 AM

Google News

ADDED : டிச 16, 2025 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட் டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் பாக்டீரியா இலை கருகல் நோய் தென்பட துவங்கியுள்ளது.

வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறிய தாவது:

சித்தாலங்குடி, புதுார், தென்கரை, மன்னாடிமங்கலம் பகுதிகளில் நோய் அறிகுறிகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நோயினை கட்டுப் படுத்த வயலில் அதிக தழைச்சத்து அளிப்பதை தவிர்க்கவும். கதிர் பருவங்களில் தழைச்சத்து உரம் அளிப்பதை தள்ளி போட வேண்டும். மேலும் வயல்களில் பூக்கும் பருவத்தினை தவிர மற்ற நேரங்களில் நீரை வடிக்கவும், நோய் பாதித்த வயலில் இருந்து நீர் மற்ற வயல் களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

நோய் தாக்கப்பட்ட வயல்களில் 3 சதவீத வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டையில் சாறு எடுத்து தெளிக்கலாம். பசுமையான மாட்டுச்சாண சாற்றை நுண்ணுயிரி அழுகல் நோயை கட்டுப்படுத்துவதற்காக தெளிக்கலாம். 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதனை படியவிட்டு பின் நன்கு வடிகட்டிய திரவத்தை பயன்படுத்த வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்லின் கலவை 300கிராம், காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால் 15 நாட் களுக்கு ஒரு முறை இக் கலவையை தெளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us