நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியம் சார்பில் மதுரை காந்தி என். எம். ஆர். சுப்பராமன் மகளிர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் கோமதி வரவேற்றார். தாளாளர் ஜனரஞ்சனி பாய் தலைமை வகித்தார்.
மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் ஜெயசுதா 'காந்தியடிகளின் அமைதி சிந்தனை' எனும் தலைப்பில் பேசினார். இளநிலை உதவியாளர் நித்யாபாய் நன்றி கூறினார். காந்தியின் புகைப்பட கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி ஆலுவலர் தேவதாஸ், பேராசிரியர் (ஓய்வு) முத்துராஜா கலந்து கொண்டனர்.