ADDED : ஆக 23, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : முன்னாள் படைவீரர்கள் நலனிற்காக 'வீர் பரிவார் சகாயதா யோஜனா' திட்டத்தை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி மதுரையிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் சட்ட உதவி மையம் துவக்கப்பட்டது. சார்பு நீதிபதி பிரசாத் துவக்கி வைத்தார். இது புதன் கிழமைகள் தோறும் செயல்படும். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சட்டம் சார்ந்த, சட்டம் சாராத பிரச்னைகளுக்கு சட்ட உதவி, ஆலோசனையை இலவசமாக பெறலாம்.