ADDED : நவ 23, 2024 05:17 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்; திருமங்கலம் இறையன்பு நுாலகம் சார்பில் மைக்குடி கிளை நுாலகத்தை நிறுவனர் பார்த்தசாரதி திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சித்துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மைக்குடி நடுநிலைப்பள்ளி ஆசிரியை தாமரைச்செல்வி, வக்கீல் முத்துராஜா முன்னிலை வகித்தனர். அதை ஊரைச் சேர்ந்த செண்பக செல்வி நுாலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
