ADDED : ஆக 21, 2024 04:35 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம், : திருமங்கலம் தெற்கு தெரு மகாத்மா காந்தி நுாலகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான நுால்களை இலவசமாக வழங்கினர்.
பட்டய தலைவர் பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், தலைவர் சுந்தரம், செயலாளர் விஜயபாண்டியன், பொருளாளர் பழனி முத்துக்குமரன், கவுன்சிலர்கள் செல்வம், அமுதா, கற்றல் மைய ஒருங்கிணைப்பாளர் இருளப்பன், திருமங்கலம் நலச்சங்க தலைவர் சங்கையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
