sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உள்ளூர் காளைகள் புறக்கணிப்பு உரிமையாளர்கள் முற்றுகை

/

உள்ளூர் காளைகள் புறக்கணிப்பு உரிமையாளர்கள் முற்றுகை

உள்ளூர் காளைகள் புறக்கணிப்பு உரிமையாளர்கள் முற்றுகை

உள்ளூர் காளைகள் புறக்கணிப்பு உரிமையாளர்கள் முற்றுகை


ADDED : ஜன 15, 2024 05:15 AM

Google News

ADDED : ஜன 15, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை ; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளை புறக்கணித்ததாக கூறி மாடுபிடிவீரர்கள், காளை உரிமையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன., 15 ) அவனியாபுரம், நாளை (ஜன., 16) பாலமேடு, நாளை மறுநாள் (ஜன., 17) அலங்காநல்லுாரில் ஜல்லிகட்டு போட்டிகள் நடக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஜன., 10 ல் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். நேற்று மதியம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு வேலைகளை ஆய்வு செய்ய அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி உள்ளிட்டோர் சென்றனர்.

இந்நிலையில் உள்ளூரைச் சேர்ந்த காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் கிடைக்கவில்லை எனக்கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் அவர்களுடன் பேசியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us