ADDED : ஜன 26, 2026 05:33 AM
மதுரை, ஜன.26 -மதுரை மடீட்சியாவின் மேட் இன் மதுரை கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.
மதுரையில் ஜன. 23 முதல் ஜன.25 வரை நடந்த கண்காட்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் குமார் ஜெயந்த் பேசினார். அவர் பேசியதாவது: மதுரை சுற்றுலாவை விரிவுபடுத்த மீனாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களை பற்றி அறியும் விதமாக அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும். மதுரை பகுதிகளில் தொழிற்சாலைகள் பெரிய அளவில் உருவாக வேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி பெறும். எம்.எஸ்.எம். இ., துறையின் செயல்பாடு சிறந்த முறையில் தொழில் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பேசினார். மடீட்சியா தலைவர் செந்திகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் மதுரை ஜமால் முஹம்மது யாசிக், அரவிந்த், சியாம் நாராயண் பங்கேற்றனர். கண்காட்சி நடந்த நாட்களில் குலுக்கல் முறையில் தினமும் பரிசுகள் வழங்கப்பட்டன.

