sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை புத்தகத் திருவிழா இன்று மாலை துவக்கம் செப்.15 வரை நடக்கிறது

/

மதுரை புத்தகத் திருவிழா இன்று மாலை துவக்கம் செப்.15 வரை நடக்கிறது

மதுரை புத்தகத் திருவிழா இன்று மாலை துவக்கம் செப்.15 வரை நடக்கிறது

மதுரை புத்தகத் திருவிழா இன்று மாலை துவக்கம் செப்.15 வரை நடக்கிறது


ADDED : செப் 05, 2025 03:56 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்.5 முதல் செப்.15 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை, இன்று (செப்.5) மாலை 6:00 மணிக்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் துவக்கி வைக்கின்றனர்.

தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் குளிரூட்டப்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது.

புத்தகத் திருவிழாவில் சிற்றுண்டி வகைகளுக்கான உணவு அரங்குகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களுக்கான அரங்கமும் உண்டு. அனுமதி இலவசம்.

ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை ஆகியவை செய்துள்ளன.

தினமலர் சந்தா ரூ.1999 செலுத்தினால்

ரூ.1000 மதிப்பில் புத்தகங்கள் இலவசம்

புத்தகக் கண்காட்சியில், தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் (எண் 24, 25) சந்தா ஒன்று, பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால், ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கான காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us