sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு "அலார்ட்'

/

மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு "அலார்ட்'

மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு "அலார்ட்'

மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு "அலார்ட்'


ADDED : ஜூலை 26, 2011 12:46 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் மழைநீர் தேங்காதவாறு, வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ள,' அதிகாரிகளுக்கு 'அலார்ட்' செய்யப்பட்டுள்ளது.

மழைகாலத்தில் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதியில், நீரில் மிதப்பது வழக்கமாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக, 2007 மே 2ல், 256 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர்வடிகால் திட்டம் கொண்டு வரப்பட்டது. நிதி இல்லாமல் திட்டம் முடங்கியுள்ளதால், மழைகாலத்தில் மதுரை மக்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படும். மராமத்து பணிக்காக, 11 கால்வாய்களில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை, மழைநீர் வெளியேற சிக்கல் ஏற்படுத்தும் என்பதால், அதை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மழைநீரை வெளியேற்றும் விதமாக, மண் அள்ளும் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்தி, பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகள் பற்றி அறிந்திருந்தால், முன்கூட்டியே தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர் பொறியாளர் மதுரம் கூறியதாவது: மழைநீர் தேங்காமல் வெளியேற்ற, அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை செல்ல வசதியாக கால்வாய்களை தயார்படுத்துமாறு கூறியுஉள்ளோம், என்றார்.








      Dinamalar
      Follow us