sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

/

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை

வைகையில் கழிவுநீர்: தடுக்க கோரிக்கை


ADDED : செப் 01, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உணவு பொருள்

வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது.

மதுரையில் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் ஜெயப்பிரகாசம் தலைமையில் நடந்தது. ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., செயலாளர் வேல்சங்கர், பொருளாளர் கதிர்வேல், துணை தலைவர்கள் முனியப்பன், சுபாஷ்சந்திரபோஸ், தெய்வராஜன், இணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், ஜெயகர் பேசினர். நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,விடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும். வண்டியூர் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி, படகு சவாரி விட வேண்டும். மாநகராட்சி எல்லையில் பழுதான குண்டும் குழியுமான ரோடுகளை சரி செய்ய வேண்டும். பழைய சென்ட்ரல் மார்க்கட் செயல்பட்ட இடத்தில் பல அடுக்கு மாடிகள் கொண்ட பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நகருக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டும். வெங்கலகடைத்தெருவில் காலை 11 முதல் பகல் 3 மணிக்குள் லாரிகளை அனுமதிக்க வேண்டும். குடிநீர் ஆதராமான வைகை அணையில் 20 அடியுள்ள சேறும், சகதியை அகற்ற, ரூ.150 கோடியிலான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து அரசை வலியுறுத்த வேண்டும், என்றனர்.










      Dinamalar
      Follow us