sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழந்தையின் நுரையீரலுக்குள் சிக்கிய ‛பொம்மை காரின் 'எல்.இ.டி.,லைட்' அகற்றம்; மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

/

குழந்தையின் நுரையீரலுக்குள் சிக்கிய ‛பொம்மை காரின் 'எல்.இ.டி.,லைட்' அகற்றம்; மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

குழந்தையின் நுரையீரலுக்குள் சிக்கிய ‛பொம்மை காரின் 'எல்.இ.டி.,லைட்' அகற்றம்; மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

குழந்தையின் நுரையீரலுக்குள் சிக்கிய ‛பொம்மை காரின் 'எல்.இ.டி.,லைட்' அகற்றம்; மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

1


ADDED : நவ 06, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திண்டுக்கல் குட்டத்துப்பட்டியைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் இடதுபக்க மூச்சுகுழாயில் சிக்கிய விளையாடும் 'ரிமோட்' காரின் 'எல்.இ.டி., லைட்டை' மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.

இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அக்., 28 மதுரை அரசு மருத்துவமனைக்கு இக்குழந்தை அனுப்பப்பட்டது. எக்ஸ்ரே பதிவில் குழந்தையின் இடதுபக்க நுரையீரலின் மூச்சுகுழாயில் ஊசிபோன்ற பொருள் இருப்பது தெரிந்ததால் சிறிய 'பிராங்கோஸ்கோப்பி' கருவி மூலம் அப்பொருள் அகற்றப்பட்டது என்றார் நுரையீரல் பிரிவு துறைத்தலைவர் பிரபாகரன்.

அவர் கூறியதாவது:

குழந்தையின் மூச்சுகுழாய் சிறிதாக இருக்கும். மயக்க மருந்துடன் 'பிராங்கோஸ்கோப்பி' கருவியை உள்ளே செலுத்துவது சிக்கலாக இருந்தது. எனவே பிரத்யேக முகக்கவச முறையில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. நடை பழக ஆரம்பிக்கும் குழந்தைகள் தான் ஏதாவது பொருளை எடுத்து வாயில் இடுவர். இந்த குழந்தை 8 மாதமே ஆனது என்றாலும் நுரையீரலில் அந்த பொருள் சிக்கி 2 முதல் 3 வாரங்கள் ஆகியிருக்கலாம். நல்லவேளையாக நுரையீரலுடன் ஒட்டாத நிலையில் இருந்ததால் கருவி மூலம் அப்பொருளை அகற்ற முடிந்தது. பொருளை வெளியே எடுத்தபின்பே விளையாடும் 'ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட்' என உறுதியானது என்றார்.

இந்த சிகிச்சைக்கு உதவிய நுரையீரல் பிரிவு உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருப்பசாமி, ஸ்ரீனிவாசகுமார், மயக்க மருந்து நிபுணர்கள் சிவக்குமார், பிரமோத் ஆகியோரை டீன் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.

டீன் கூறுகையில், ''சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் இட்டு விழுங்கி விடுவர். அவை வயிற்றிலோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளதால் சிறு பொருட்களை விளையாட தரக்கூடாது. இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us