/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மதுரை உதவி ஜெயிலருக்கு செருப்படி
/
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மதுரை உதவி ஜெயிலருக்கு செருப்படி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மதுரை உதவி ஜெயிலருக்கு செருப்படி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு மதுரை உதவி ஜெயிலருக்கு செருப்படி
ADDED : டிச 22, 2024 02:23 AM

மதுரை:மதுரை சிறையில் உதவி ஜெயிலராக இருப்பவர் பாலகுருசாமி. நேற்று மதியம், 12:00 மணியளவில் பணி நேரத்தில் ஆரப்பாளையம் ரோட்டில், 14 வயது சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரிடம் சிறுமியின் சித்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், பாலகுருசாமியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
மதுரை சிறையில் தண்டனை முடிந்து வெளியே வந்த கைதி ஒருவர், ஆரப்பாளையத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகளின் 14 வயது மகள், தாத்தாவான முன்னாள் கைதியின் பராமரிப்பில் உள்ளார்.
டிபன் சென்டருக்கு அடிக்கடி வரும் பாலகுருசாமி, 3வது மகளிடம் தொடர்பில் இருக்க முயற்சித்தார். அப்பெண் சம்மதிக்காததால், சிறுமியிடம் மொபைல் போன் எண்ணை கொடுத்து தன்னிடம் பேசுமாறு கூறி உள்ளார்.
சித்தியிடம் சிறுமி கூறினார். ஆத்திரமுற்ற சித்தி, பாலகுருசாமியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டார்.
நேற்று பணி நேரத்தில் பாலகுருசாமியிடம் சிறுமி போனில் பேசினார். அவரை ஆரப்பாளையம் ரோட்டில் ஒரு ஏ.டி.எம்., அருகே வருமாறு பாலகுருசாமி கூறினார்.
அங்கு சிறுமியை சந்தித்தவர், 500 ரூபாய் கொடுத்து, பாலியல் ரீதியாக பேசிக் கொண்டிருந்த போது, மறைவாக காத்திருந்த சித்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார்.
இதனால் அவ்வழியே சென்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு கூறினர்.