/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நோயாளிகள் கூடமாகிய தென்கரை ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டடம்ஆசிரியர், மணவர்கள் அவதி
/
நோயாளிகள் கூடமாகிய தென்கரை ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டடம்ஆசிரியர், மணவர்கள் அவதி
நோயாளிகள் கூடமாகிய தென்கரை ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டடம்ஆசிரியர், மணவர்கள் அவதி
நோயாளிகள் கூடமாகிய தென்கரை ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டடம்ஆசிரியர், மணவர்கள் அவதி
ADDED : ஜூலை 28, 2011 03:28 AM
சோழவந்தான் : சோழவந்தான் அருகே ஊராட்சி துவக்கப்பள்ளியில் சமுகவிரோதிகள்,
நோயாளிகள் தங்கும் கூடமாகி உள்ளது. தென்கரை ஊராட்சியில் உள்ள ஒன்றிய
ஊராட்சி துவக்கப்பள்ளியில் 35 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இரண்டு பெண் ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். முப்பது ஆண்டிற்கு முன் ஓட்டு
மேற்கூரையுடன் ஒரு பழைய கட்டடம் உள்ளது. இங்கு நோட்டு,புத்தகங்கள், மற்ற
கல்வி சாதனங்கள் பாதுகாப்பாக வைக்க முடியாது, திருடும் போகும் என்பதால் இது
செயல்படவில்லை. அதற்கடுத்து பத்து ஆண்டிற்கு முன் அண்ணா மறுமலர்ச்சி
திட்டத்தில் கட்டிய கட்டமும் உள்ளது.
இந்த கட்டடத்தில் பள்ளி செயல்பட்டது.
இக் கட்டடத்தில் கதவு, ஜன்னல், மின்சார வயர்கள் பழுதாகியதால், கடந்த ஜனவரி
மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டு இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த சமுகவிரோதிகள் பள்ளி கட்ட வளாகத்தில் இரவில் மது,
கஞ்சா குடித்துவிட்டு, போதை உச்சத்தில் பாட்டிலை அங்கேயே உடைத்து,
கரும்பலகையில் அசிங்கமான வார்த்தைகளை எழுதுகின்றனர். தினமும் காலை
பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதத்தை உடைந்த பாட்டில் கண்ணாடி பதம்
பார்க்கிறது. அவைகளை அப்புறப்படுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள்
மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த நோயாளிகள்
தங்கும் விடுதியாகவும் பள்ளியை பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி
நடத்தமுடியாது, அருகில் இருக்கும் பாதுகாப்பு இல்லாத ஓட்டு மேற்கூரை
கட்டடத்தில் பள்ளி செயல்படுகிறது. பல்வேறு வகைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கரை ஊராட்சி நிர்வாகம், கல்வித்தறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்கவேண்டும்.