sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கைது பயத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத தி.மு.க., நிர்வாகிகள்

/

கைது பயத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத தி.மு.க., நிர்வாகிகள்

கைது பயத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத தி.மு.க., நிர்வாகிகள்

கைது பயத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத தி.மு.க., நிர்வாகிகள்


ADDED : ஜூலை 30, 2011 03:12 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி, மதுரையில் நேற்று தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கைது பயத்தில் பங்கேற்கவில்லை. ஸ்காட் ரோட்டில் இலக்கிய அணி செயலாளர் சேவுகப்பெருமாள் துவக்கி வைத்தார். நிலமோசடி வழக்கில் நகர் செயலாளர் தளபதி சிறையில் இருப்பதால், அவைத் தலைவர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி வகுப்பை மாணவர்கள் புறக்கணித்தது போல் காட்டுவதற்காக, கட்சிக்காரர்களின் பிள்ளைகள் 15 பேரும், பெற்றோர் தரப்பில் கட்சிக்காரர்களின் மனைவிகள் 30 பேரும், மகளிரணியினர் சிலரும் அழைத்து வரப்பட்டிருந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் கைது பயத்தில் இருப்பதால், மாஜி நகர் செயலாளர் வேலுச்சாமி, மாஜி மேயர் குழந்தைவேலு, மாஜி எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா உட்பட சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

நானூறு பேருடன் துவங்கிய ஆர்ப்பாட்டம், முடியும்போது 150 ஆக குறைந்தது. வந்திருந்த நிர்வாகிகள் மேடை ஏறாமல் ஒதுங்கியே நின்றுவிட்டு கலைந்து சென்றனர். அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடந்ததால், யாரும் கைது செய்யப்படவில்லை. உசிலம்பட்டி: மனித உரிமைகள் கழகம் மாவட்டச் செயலாளர் அந்தோனி தலைமையில், மாணவர்கள் கல்வி உரிமை பாதுகாப்பு பெற்றோர் சங்கத்தினர்கள் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 34 பேர்களை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us